என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அவமதிக்கும் செயல்
நீங்கள் தேடியது "அவமதிக்கும் செயல்"
ஏழை விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கூறியுள்ளார். #Mayawati #Farmer
லக்னோ:
சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 (ஒரு மாதத்துக்கு ரூ.500) நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். உத்தரபிரதேசத்தில் இந்த திட்டம் தொடங்கி வைத்த சில மணி நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசை குறைகூறினார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘ஏழை விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். தங்கள் தொழில் மீது நம்பிக்கை வைத்திருக்கும் விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்கு லாபகரமான விலையையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிறு பணத்தை கொடுக்கும் பா.ஜனதாவின் மனநிலை கோரமானது மட்டுமின்றி ஆணவப்போக்கிலானது. தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜனதா தவறிவிட்டது’ என்று கடுமையாக சாடினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால், கொஞ்சம் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.17 கொடுப்பது வெறும் ஏமாற்றுவேலை என்று கூறியுள்ள மாயாவதி, விவசாயிகள் பிரச்சினையில் பா.ஜனதா மட்டமான முறையில் சிந்திப்பதாகவும், தங்கள் அதிகாரத்தையும், அரசு எந்திரத்தையும் தொடர்ந்து தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.#Mayawati #Farmer
சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 (ஒரு மாதத்துக்கு ரூ.500) நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். உத்தரபிரதேசத்தில் இந்த திட்டம் தொடங்கி வைத்த சில மணி நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசை குறைகூறினார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘ஏழை விவசாயிகளுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500 என்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். தங்கள் தொழில் மீது நம்பிக்கை வைத்திருக்கும் விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்கு லாபகரமான விலையையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிறு பணத்தை கொடுக்கும் பா.ஜனதாவின் மனநிலை கோரமானது மட்டுமின்றி ஆணவப்போக்கிலானது. தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜனதா தவறிவிட்டது’ என்று கடுமையாக சாடினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னால், கொஞ்சம் விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.17 கொடுப்பது வெறும் ஏமாற்றுவேலை என்று கூறியுள்ள மாயாவதி, விவசாயிகள் பிரச்சினையில் பா.ஜனதா மட்டமான முறையில் சிந்திப்பதாகவும், தங்கள் அதிகாரத்தையும், அரசு எந்திரத்தையும் தொடர்ந்து தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.#Mayawati #Farmer
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X